2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு பதிவு நிலவரம்

விருதுநகர் மக்களவை தொகுதியில் வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், நகராட்சி மற்றும் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்தனர்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், நகராட்சி மற்றும் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்தனர். இதில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வலுக்கலொட்டி கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் பெண்கள் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிலும், நிற்பதற்கு முடியாமலும், கடும் வெய்யில் அடித்ததாலும் பெண்கள் மரத்தடியில் காலையில் 8 மணிக்கு வந்து நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.

அதையடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து சென்றனர். அதேபோல், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாலவநத்தம், கூரைக்குண்டு, மெட்டுக்குண்டு கிராமத்திலும், தென்காசி மக்களவை தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த அழகாபுரி, கரிசல்குளம் கிராமங்களிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மணிக்கொரு முறை வாக்கு பதிவு நிலவரம் வருமாறு: காலையில் 9 மணி நிலவரப்படி 16.23 சதவீதமும், 11 மணிக்கு 36.03 சதவீதமும், 1 மணிக்கு 46.05 சதவீதமும் மற்றும் 3 மணி நிலவரப்படி 59.01 சதவீதமும் வாக்கு பதிவாகியிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.