2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே போலீஸாரிடம் தகராறு செய்த தேமுதிக நிர்வாகியின் மண்டை உடைந்தது

விருதுநகர் அருகே வாக்குச் சாவடியில் போலீஸாருடன் தகராறு செய்த தேமுதிக நிர்வாகியின் மண்டை உடைந்ததால் ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வாக்குச் சாவடியில் போலீஸாருடன் தகராறு செய்த தேமுதிக நிர்வாகியின் மண்டை உடைந்ததால் ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு 2 மணிநேரம் பாதிப்பு அடைந்தது.

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி(35). இக்கிராமத்தின் தேமுதிக கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இக்கிராம  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்திற்கு வாக்கு பதிவு செய்வதற்காக வந்தாராம். அப்போது, அந்த மையத்திலிருந்தவர்கள் அடையாள சீட்டை வாங்கி பார்த்து, அடுத்த வளாகத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு செல்லும் போது தோளில் தேமுதிக கட்சியின் மப்ளருடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் துண்டை அகற்றுமாறு கூறியதால் வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி காவல் ஆய்வாளரை கீழே தள்ளினாராம். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சோலைராஜ் என்ற போலீஸார் தாக்கி கீழே தள்ளியதில் மலைச்சாமியின் மண்டை உடைந்தது.

இச்செயலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் காவல் துணைக்கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் மற்றும் போலீஸார் ஆகியோர் வாக்கு பதிவு தாமதமாகிறது. அதனால், மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு வாக்காளிக்கச் சென்றவரை தாக்கிய போலீஸார் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். தேமுதிக தொண்டரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

அதன் பின் படுகாயம் அடைந்தவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இப்போராட்டத்தினால் வாக்கு பதிவு 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.