2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இறுதிக்கட்ட பிரசாரம்

விருதுநகரில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் மோட்டார் வாகனங்களில் பேரணியாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:04 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் மோட்டார் வாகனங்களில் பேரணியாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.

மக்களவைத் தேர்தல் இரண்டு நாள்களே உள்ளதால், இறுதியாக செவ்வாய்கிழமை மாலையோடு பிரசாரம் முடிகிறது. அதனால், அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் பஜார், அருப்புக்கோட்டை சாலை, அல்லம்பட்டி முக்குரோடு, ராமமூர்த்தி சாலை, பாண்டியன்நகர், முத்தால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது பாண்டியன்நகரில் பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:

இதுவரையில் இத்தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்து பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். அதோடு, விருதுநகர்-மானாமதுரை அகலப்பாதையில் ரயில் இயக்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு  நிதி உதவி மற்றும் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்.

மேலும், வறட்சி காலங்களில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் தேசிய ஊரக உறுதி திட்டம் மூலம் ஒவ்வொருவருக்கும் 100 நாள்கள் வேலை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்ட வேலையை 150 நாள்களாக அதிகரிக்கவும், கூலியாக ரூ.148-லிருந்து ரூ.200 உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதனால், மீண்டும் போட்டியிடும் எனக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கும் படி மக்களவை தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.

அப்போது, உடன் மாவட்ட தலைவர் வேலாயுதம், நகர செயலாளர் பாப்கான் கார்த்திகேயன், சட்டப்பேரவை தொகுதி தலைவர் மோகன், வைரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.