2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தேர்தல் பணிக்கு கேரள ஆயுதப்படை போலீஸார் வருகை

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:03 am

எஸ். பாண்டியன்

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக கேரள சிறப்பு ஆயுதப்படை பிரிவின் 3 கம்பெனியினர் விருதுநகருக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்தனர்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரையும் பாதுகாப்பு பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்துவது வழக்கம். அதேபோல், இந்த மக்களவை தேர்தலிலும் ஈடுபடவுள்ளனர். விருதுநகர் மக்களவை தொகுதியில் 2500 போலீஸாருடன் தேர்தலை எதிர்கொள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் 10 கம்பெனிகள் தேவையென தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ஏற்கனவே இத்தொகுதிக்கு சென்னை மணலியில் இருந்து தொழில் பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு கம்பெனியினர் கமாண்டர் தலைமையில் 92 பேர் வந்துள்ளனர். இவர்களை தனியார் அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து கேரள சிறப்பு ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த 3 கம்பெனிகளைச் சேர்ந்த 288 பேர்கள் பெங்களூருவில் தேர்தல் பணிகளை முடித்துக் கொண்டு வந்தனர். இவர்கள் பதற்றமான வாக்குச் சவாடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்வது, வாக்கு பதிவு முடிந்ததும் வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து வரும் பணியையும், வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.