இப்பணிகளை மேற்கொள்வதற்காகவே ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் வாகன சோதனைச் சாவடி அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் குழு மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வாகனங்கள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முழு அளவில் சோதனையிட வேண்டும். அதேபோல், சுற்றுலா பேருந்துகளில் பொருள்கள் வைப்பறை பகுதியிலும், சீட்டுக்கள், இயந்திர பகுதி ஓரங்களிலும், அதேபோல் சொகுசு கார்களில் சீட்டுக்கள், பின்புறம் ஆகியவைகளில் சோதனையிட்ட பின்னரே அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், அரசியல்வாதிகள் வாகனங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆய்வு செய்ய வேண்டும்.