2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் அரசியல் கட்சியினர் மீது பாரபட்சமில்லாமல் காவல் துறையின் மூலம்  நடவடிக்கை எடுக்கவும், சோதனைச் சாவடிகளில் எந்நேரமும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:00 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் அரசியல் கட்சியினர் மீது பாரபட்சமில்லாமல் காவல் துறையின் மூலம்  நடவடிக்கை எடுக்கவும், சோதனைச் சாவடிகளில் எந்நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரும் கிராமங்கள்தோறும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, கிராமங்களில் அரசியல் கட்சியின்  நிர்வாகிகள் மூலம் இரவு நேரங்களில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு பணி பலப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்வதற்காகவே ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் வாகன சோதனைச் சாவடி அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் குழு மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வாகனங்கள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முழு அளவில் சோதனையிட வேண்டும். அதேபோல், சுற்றுலா பேருந்துகளில் பொருள்கள் வைப்பறை பகுதியிலும், சீட்டுக்கள், இயந்திர பகுதி ஓரங்களிலும், அதேபோல் சொகுசு கார்களில் சீட்டுக்கள், பின்புறம் ஆகியவைகளில் சோதனையிட்ட பின்னரே அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், அரசியல்வாதிகள் வாகனங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்காகவே மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தால், உடனே அந்த  இடத்திற்கு செல்லும் வகையில் வாகனங்கள் மற்றும் அலுவலர்கள் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக புகார் வந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று கண்காணிக்க வேண்டும். அச்செயல்களில் எந்த அரசியல் கட்சியினர் ஈடுபட்டாலும் பாரபட்சமில்லாமல் காவல் துறையினரின் கைது நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால், இக்குழுவினர் இரவு நேரங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.