பொதுவாக இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தைப் பார்க்கும் போது விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், வேட்பாளர்களின் பெயர்களை தலைவர்கள் உச்சரித்தால், அது வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேரும் என்று, தேர்தல் ஆணையம் கூறுவது சரியல்ல. கட்சியின் கொள்கையைப் பிரசாரம் செய்வது, தேர்தல் செலவுக் கணக்கில் வராது என்பது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல். ஏற்கெனவே இவ்வாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே, தேர்தல் ஆணையம் இவ்வாறு புது அறிவிப்பைக் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பல இடங்களில் நான் வேட்பாளர் பெயரைக் கூற முடியாமல் போகிறது.