2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு

விருதுநகர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(35). இவர் சூலக்கரை தொழில் பேட்டையில் உள்ள ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணியை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:55 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் வளைவில் திரும்பும் போது தவறி விழுந்த தொழிலாளி தலையில் பலத்த காயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(35). இவர் சூலக்கரை தொழில் பேட்டையில் உள்ள ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, ஆடை உற்பத்தி நிலையத்திலிருந்து 4 வழிச்சாலைக்கு வருவதற்காக திரும்பியுள்ளார். அப்போது, கல்லில் பட்டு வாகனம் இடறியதால் தவறி கீழே விழுந்தாராம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் கிடந்தவரை, பின்னால் வந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாராம். இச்சம்பவம் தொடர்பாக சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.