2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பைக் மீது டேங்கர் லாரி மோதல்: மாணவர்கள் 2 பேர் சாவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிக்கந்தர் சுல்தான். இப்பகுதியில் கசாப்பு கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முஹமது அபுபக்கர்(20).

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:55 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு  உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிக்கந்தர் சுல்தான். இப்பகுதியில் கசாப்பு கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முஹமது அபுபக்கர்(20). காரியாபட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். பாலையம்பட்டியைச் சேர்ந்த எபினேசர்(18). இவர் தற்போது பிளஸ்2 தேர்வு எழுதியுள்ளார். சனிக்கிழமை இரவு முஹம்மது அபுபக்கருடன் கறிக்கடை பணத்தை வசூல் செய்வதற்காக பந்தல்குடி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, எபினேசரும் உடன் சென்றுள்ளார்.

பணம் வசூல் செய்து விட்டு 11 மணிக்கு அருப்புக்கோட்டை திரும்பியுள்ளனர். அப்போது பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் வரும் போது துத்துக்குடியிலிருந்து-மதுரை நோக்கிச் சென்ற டேங்கர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இது தொடர்பாக பந்தல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து வரிச்சியூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜாங்கம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.