சனிக்கிழமை கடைசி நாள் என்பதால் காலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் முன்பாகவே வளாகத்திற்கு முன்பு சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதையடுத்து குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ்(63), திமுக மாற்று வேட்பாளராக கோ.தளபதி(60), அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் காரியாபட்டி நெடுங்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(36), தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த மோகனின் மனைவி தீபா(34), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன்(64), திருநெல்வேலி செவல்குளத்தைச் சேர்ந்த கேசவன்(29), சென்னை போரூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பாண்டியராஜன்(35), சாத்தூர் படந்தாலைச் சேர்ந்த மாரிமுத்து(45) மற்றும் அருப்புக்கோட்டை அழகர்சாமி(47) உள்ளிட்ட 11 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.