2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்து:  2 பேர் காயம்

விருதுநகர் அருகே உள்ளது முத்துலிங்காபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 40 அறைகளில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:54 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பசை தயாரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தினால் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது முத்துலிங்காபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 40 அறைகளில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பட்டாசுகளில் தாள்களை சுற்றி ஒட்டுவதற்காக பழைய பட்டாசு கழிவுகளை போட்டு பசை தயாரிக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாரத விதமாக கழிவுகளில் உள்ள கரிமருந்து திடீரென பற்றியதால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பணியில் ஈடுபட்டிருந்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமர்(22), ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.உடனே தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வச்சககாரப்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.