2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட  4 பேர் வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வியாழக்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:53 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வியாழக்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அதன் அடிப்படையில் இத்தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் ஆகியோர்  விரும்பி வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். அவ்வகையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்குரைஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பு.கமலவேல்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல், ஸ்ரீவில்லிப்புத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த கோவிந்தனின் பட்டதாரி மகன் மணிகண்டன்(32), சாத்தூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகனும், ஆசிரியர் பட்டதாரியுமான லட்சுமிகாந்தன்(29), சாத்தூரைச் சேர்ந்த சின்னமணி என்பவரின் மகன் சுரேஷ்காந்த்(40) ஆகியோர் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட விரும்பி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.