காமராஜர் பிறந்த ஊரில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். அதேநேரத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் பெருந்தலைவர் ஆட்சி அமைக்கிறேன் என்கிறார்கள். காமராஜருக்கு கீழேதான் கக்கன் இருந்தார். அவர் எளிமையாக பிறந்து, கடைசி வரையில் எளிமையாகவே வாழ்ந்து மறைந்தார். இதுபோன்ற இன்றைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால், தன்னலம் கருதாமல், பொதுமக்களுக்கான பணிகளை மட்டுமே வைகோ மேற்கொண்டு வருகிறார். அவருக்காக உங்களிடம் ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால், அவர் பேசுவதை பார்க்க மட்டும் கூட்டம் வருகிறது. அவருக்கு வாக்கு போட மறந்து விடுகிறீர்கள்.