தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் சுயேட்சைகள் 5 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதாலும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இருந்தாலும் அன்றைய நாள்களில் வேட்பு மனுத்தாக்கல் எதுவும் இல்லை. இந்நிலையில் செவ்வாய்கிழமை மதிமுக, அதிமுக வேட்பாளர்களுடன் சுயேட்சையாக போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர்.