பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆடிட்டர் ரமேஷ் படுகொலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வேதனை அளிக்கிறது: பாஜக

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வேதனை அளிப்பதாக

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:44 pm

க. தங்கராஜா

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வேதனை அளிப்பதாக இருப்பதாக பாஜக மாநிலச் செயலர் சிவகாமி பரமசிவம் தெரிவித்துள்ளார்.

 பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பா.ஜ.க. தலைவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீஸாரின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கொலையாளிகளை நாடு முழுவதும் தேடி வருகின்றனர்.

 இந்த நிலையில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு வியாழக்கிழமையுடன் (செப்டம்பர் 19) 60-வது நாள் என்பதால், அவரது ஆன்மா சாந்தியடைய சேலம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜகணபதி திருக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

 பாஜகவினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலர் சிவகாமி பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியது:

 நாட்டையே உலுக்கிய இந்த கொலை நடந்து 2 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் குறித்து போலீஸார் இதுவரையிலும் உறுதியான தகவலை வெளியிடாதது தங்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.

 இருப்பினும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸூக்கு இணையாக தமிழக காவல்துறையை கருதுவதால், காலம் தாழ்ந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

 அதேநேரம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதே பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் போலீஸார் மீது நம்பிக்கை வரவழைப்பதாக இருக்கும். மேலும் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினர் கோரிக்கை மனு வழங்க அனுமதியும் நேரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.