கரூர் மக்கள்பாதை வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி(30), செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த கோபால்(35)ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து கடந்த 12 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதை நம்பி ராயனூர், செல்லாண்டிப்பாளையம், தட்டங்காடு, ஆட்டயம்பரப்பு, கேசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இவர்களது சீட்டில் சேர்ந்தோம். இதில் 50 மாதம் சீட்டி கட்டினால் 51-வது மாதத்தில் ரூ.100க்கு ரூ.20 வட்டி போட்டு கொடுக்கப்படும் என கூறியிருந்தனர். இதே போல தீபாவளி பண்டிகைக்காக ரூ.100, 200, 300 என வாரச்சீட்டும் நடத்தினர். இதை தவிர ரூ.50,000 முதல் ரூ. 1 லட்சம், 2லட்சம் வரையிலான ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர்.