தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திமுக பிரதிநிதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

கரூர் வெங்கமேடு எஸ்.பி.காலனி 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குமார்(40). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ம்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின்

Updated On :23 அக்டோபர் 2013, 12:56 pm

கரூர் அருகே திமுக பிரதிநிதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

கரூர் வெங்கமேடு எஸ்.பி.காலனி 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குமார்(40). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ம்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த குமாரின் 2 இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது யாரோ மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது தொடர்பாக குமார் வெங்கமேடு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குத்தொடர்பாக மாயனூர் மேலடையில் உள்ள மாணிக்கபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் காளிதாஸ்(25) என்ற இளைஞரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், காளிதாஸின் உறவினரின் மகள் குமாரின் மைத்துனர் கிருஷ்ணன் என்பவரின் மகளோடு கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் கிருஷ்ணன் மகளை காளிதாஸ் ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கும், கிருஷ்ணனின் மகளுக்கும் திருமணம் என காளிதாஸ் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் காளிதாஸை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 21ம்தேதி குமார் வீட்டில் காளிதாஸ் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.