எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பம் செய்து பயனடையலாம். இவர்களுக்கு 1.7.2013 அன்றைய நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமான அதிக பட்சம் ரூ.1 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இதில், தொழில் முனைவோர் திட்டத்தில் நிலம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் மருத்துவர், பல் மருத்துவர், முடநீக்கும் மையம், கண்கண்ணாடியகம், ரத்த பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல், லாரி மற்றும் வாகனம் வாங்க கடனுதவி பெற கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.