கடலூரில் கடல் வெள்ளிக்கிழமை மதியம் வரை எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கமான நிலையில் இருந்தது. மதியத்திற்கு பிறகு, கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது. முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றை, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது, அனைத்து துறை அதிகாரிகளும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் தேவையை சமாளிக்க, 5 கிராமங்களுக்கு ஓன்று என்ற விகிதத்தில் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றார்.