இதில் பாஷா, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரங்கநாதனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தனது தாயாருடன் உள்ள தொடர்பை வைத்து ரங்கநாதனிடம் பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்ட பாஷா, கடந்த 19-ம் தேதி அவரை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டியுள்ளார். இதனால் ரங்கநாதனுக்கும் பாஷாவுக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது.அதில் ஆத்திரம் அடைந்த பாஷா, நண்பர்கள் உதவியுடன் ரங்கநாதனை கொலை செய்து தலை, உடலை துண்டுத் துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் அவற்றை ஒரு சாக்குப் பையில் போட்டு கிச்சிப்பாளையம் குருவிப்பனை ஏரியை ஒட்டியுள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.