ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:33 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்புக்கு அருகிலிருந்த நிலத்தில் மலைப்பாம்பு இருந்துள்ளது.  சனிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்ற அவ்வூர் மக்கள் பார்த்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் அடைத்தனர்.  இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அளித்து 2 மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அதனை கொண்டு சென்று அருகிலிருந்த காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.