பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மளிகைக் கடை ஊழியர் மர்மச் சாவு

தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:26 pm

க. தங்கராஜா

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மளிகைக் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் சாம்ராஜ், வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது சாம்ராஜ், மர்மமான முறையில் படுக்கையில் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாம்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.