காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தியவர் ரூ. 5 கோடியுடன் தலைமறைவானதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் 20 மாதம் கொண்ட ரூ. 5 லட்சம் சீட்டு, 30 மாதம் கொண்ட ரூ. 9 லட்சம் சீட்டு ஆகிய வகைப்பாட்டில் பல்வேறு பிரிவுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர் ரூ. 5 கோடியுடன் தலைமை மறைவானதாக கூறப்படுகிறது. இது குறித்து வாலாஜாபாத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து இன்று மனு அளித்தனர். சீட்டு நடத்திய சுந்தரம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளார். எனவே தலைமறைவான சந்தரத்தை போலீஸார் கண்டுப்பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

