கரூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவரும் பார் கவுன்சில் உறுப்பினரும், கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மாரப்பன் என்பவர் தலைமையில் 17 வழக்குரைஞர்கள் கடந்த மே 10-ம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு ஒரு விடுதியில் தங்கியிருந்த வழக்குரைஞர்களிடம், விடுதி பணியாளர்கள் கூடுதல் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, விடுதியின் உரிமையாளர் வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குரைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டம் 5 கிராமம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.