சேலத்தை அடுத்த சுக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை பால் வேன் - பைக் மோதிக் கொண்ட விபத்தில் முடி திருத்தும் கடை உரிமையாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் சீனிவாசன் (26). வீராணம் பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் கடத்தூரைச் சேர்ந்த ஆர்.ராமலிங்கம் (27).ஓமலூரைச் சேர்ந்த சுரேஷ் (25). ராமலிங்கம் மணல் மேடு பகுதியிலும் சுரேஷ் அழகாபுரத்திலும் முடி திருத்தும் கடை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சீனிவாசன் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இன்று கடை விடுமுறை என்பதால் நண்பர்கள் இருவரையும் அந்த பைக்கில் ஏற்றிக் கொண்டு கீரிப்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஆச்சாங்குட்டப்பட்டி அருகேயுள்ள கோமாளி வட்டம் என்ற இடத்தில் வந்த போது, பைக்கும் சேலத்தில் இருந்து அரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த சீனிவாசன், ராமலிங்கம், சுரேஷ் ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற வீராணம் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் இன்று பிற்பகலில் மழை பெய்து கொண்டிருந்ததால் இந்த விபத்து நேரிட்டிருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த சீனிவாசனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் சேலம் - அரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

