அதன் அடிப்படையில் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் சென்னப்பட்டினத்தில் நடத்தி வரும் முறுக்கு கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து மேற்கண்ட முறுக்கு கம்பெனிக்கு எனது மகனிடம் தொலைபேசியில் பேச பலமுறை முயற்சி செய்தும் பேச முடியவில்லை. இதனால், அங்கு ஆள்கள் இல்லாத நேரத்தில் எனது மகன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். அதில், இங்கு ஓய்வு இல்லாமல் வேலை வாங்குவதாகவும், செய்யாவிட்டால் சித்ரவதை செய்வதாகவும், அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதாகவும் என்னிடம் அழுது கொண்டே தெரிவித்தான்.