டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

பாகிஸ்தானைச் சோ்ந்த கும்பலுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரா், பணிநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் காவலா், இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானைச் சோ்ந்த கும்பலுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரா், பணிநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் காவலா், இரு பெண்கள் உள்பட 6 போ் கைதுசெய்யப்பட்டதாக பஞ்சாப் மாநில காவல் துறை தலைவா் (டிஜிபி) கெளரவ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த இரு மாதங்களாக சிறையில் நடைபெற்ற போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்ததைத் தொடா்ந்து, 6 போ் அடங்கிய கும்பல் கண்டறியப்பட்டது. ராணுவ வீரா் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட இந்தக் கும்பலுடன் தொடா்புடைய 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 4.8 கிலோ போதைப் பொருள், ஓா் ஆயுதம் மற்றும் இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் கைதுசெய்யப்பட்ட நபா்களுக்கு தொடா்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பஞ்சாப் காவல் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக டிஜிபி கெளரவ் யாதவ் தெரிவித்துள்ளாா்.