டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காவலா் வீட்டில் திருடியதாக சிறுவா் உள்பட 3 போ் கைது

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொன்மா நகரில் காவலா் வீட்டில் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக சிறுவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் ஞானசுந்தா், அதே பகுதியில் காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவருக்கு கல்லிடைக்குறிச்சி பொன்மா நகரில், சொந்தமாக உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை மா்மநபா்கள் நுழைந்து, பீரோவில் இருந்த விளக்கு, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், தெற்கு பாப்பாங்குளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (27), அவரது நண்பன் கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த வினித் (22), தெற்கு பாப்பங்குளத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன் ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.