தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் அப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக ஒவ்வொரு பள்ளிக்கும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 5 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதற்கு ஒதுக்கப்பட்ட 45 முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முகாம் இன்று விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்காக, சென்னை, சேலம், ஈரோடு, கும்பகோணம், வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆனால், காலிப்பணியிடம் வரலாறு-2க்கு மட்டும் தகவல் பலகையில் குறிப்பிட்டிருந்தனர். ஏற்கனவே கடந்த 21-ம் தேதி மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாய்வு முகாமிலும் இதே பிரச்னை நடந்துள்ளது. அதேபோல், இரண்டு இடங்கள் என குறிப்பிட்டதை அடுத்து தகுதியில்லாததால் அனைத்து ஆசிரியர்களும் திரும்பச் சென்றனர்.