மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ஈரோடு அருகே பஸ் - கார் மோதல்: தாய், மகள் பலி

ஈரோடு அருகே பஸ்ஸும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தாயும் மகனும் பலியாயினர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:03 am

ஜெபலின்ஜான்

ஈரோடு அருகே பஸ்ஸும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தாயும் மகனும் பலியாயினர்.

காலை 10 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ஈரோடு - கொடுமுடி சாலையில் சாவடிப்பாளையம் ரயில்வே கேட் அருகே, ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற பஸ்ஸும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது. அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதாகவும், காரின் மீது முழுவதுமாக ஏறி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாயினர். இவர்கள் இருவரும் தாயும் மகனும் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.