15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருவெறும்பூர் அருகே சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 28 பேர் காயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்தப்பட்டது இந்தப் போட்டி. ...

News image
Updated On :15 ஜனவரி 2013, 9:14 am

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்தப்பட்டது இந்தப் போட்டி.

இதில் 28 மாடு பிடி வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் திருச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, மாட்டுப்பொங்கலான செவ்வாய்க்கிழமை இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இது மாநிலத்திலேயே ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு விழா. உச்ச நீதிமன்ற உத்தரவு, மாவட்ட நிர்வாகம் வழிக்காட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்தக் காளைகள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. மேலும், இவற்றைப் பிடிக்கும் இளைஞர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.