நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விலையில்லா லேப்டாப் கேட்டு ஆம்பூரில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்

ஆம்பூரில் விலையில்லா லேப்டாப் கேட்டு ஆம்பூரில் கல்லூரி மாணவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:20 am

எம். அருண்குமார்

ஆம்பூரில் விலையில்லா லேப்டாப் கேட்டு ஆம்பூரில் கல்லூரி மாணவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்கிய பிறகே மற்றவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரி சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.  ஜனவரி மாதத்தில் வழங்கப்படுமென உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  ஆனால் ஜனவரி மாதம் முடிந்த நிலையில் இதுவரை 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததால் புதன்கிழமையன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி கல்லூரி நுழைவு வாயிலில் நின்றனர்.  கல்லூரி முதல்வர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசிடமிருந்து லேப்டாப் வந்தபிறகு அவை வழங்கப்படுமென கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் இன்று மீண்டும் வகுப்புக்களை புறக்கணித்துவிட்டு ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோடில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆம்பூர் டிஎஸ்பி விஜயகுமார், வட்டாட்சியர் கஸ்தூரி, கல்லூரி முதல்வர் பி.எம். ஆதில் அஹமத் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விலையில்லா லேப்டாப் வழங்க ஆவன செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.