மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு
கடந்த ஜன.30ல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.


கடந்த ஜன.30ல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
கந்த ஜன.30ஆம் தேதி, நான்கு மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இருண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வருவேல், சேவியர், ஜோய், அமல்ராஜ் நான்குபேரும் சென்ற படகு, அடுத்த நாளே கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கரை திரும்பாததால், கவலை அடைந்த உறவினர்கள், மாவட்ட ஆட்சியருக்கும் காவல் துறைக்கும் தகவல் தந்தனர். இதனிடையே நேற்று இரவு 10 படகுகளில் உள்ளூர் மீனவர்கள் அந்தக் கடல் பகுதிக்குள் தீவிர தேடுதலில் இறங்கினர். அப்போது இடுமந்துறை பகுதியில் இருந்து 25 நாட்டிங்கல் மைல் தொலைவில் கடலில் அமல்ராஜின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீனவர்கள் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...