அதையடுத்து, விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளிக்கு மாலையில் வந்தடைந்தது. இதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்து, ரதயாத்திரையுடன் மாணவர்கள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில், பள்ளி மாணவர்கள் விவேகானந்தரின் வேடமணிந்து கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், சிவகாசி சாலை, சாத்தூர் சாலையில் கே.வி.எஸ்.பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைவந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து அருப்புக்கோட்டைக்கு செல்வதற்கு வழியனுப்பி வைத்தனர். இதில் விருதுநகரில் உள்ள வணிகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று ரதயாத்திரையை வரவேற்று மரியாதை செய்தனர்.