டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விதை விற்பனை உரிமம் இன்றி விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதை அடுத்து விதைப்பு பணிகள் தொடங்க இருப்பதை அடுத்து விதை விற்பனை நிலையங்களில் உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:14 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதை அடுத்து விதைப்பு பணிகள் தொடங்க இருப்பதை அடுத்து விதை விற்பனை நிலையங்களில் உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயணபிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் பரவலான மழையால் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விதை ஆய்வு அலுவலர்கள் ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் குழு அமைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.எனவே விதைகள் கட்டுப்பாட்டு சட்டம் 1983 சட்டப்பிரிவு-3ன் படி உரிமம் பெறாதவர்கள் விதைகளை விற்பனை செய்வது கடும் குற்றமாகும். இதேபோல் விதை உரிமம் பெறாமல், வீடுகளில் அல்லது பொது இடங்களில் விற்பனை செய்வது தெரியவந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது அரசு விதிமுறைப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயணபிரசாத்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.