மேலும், அதன் அடிப்படையில் விருதுநகர், சிவகாசி பகுதிகளில் குறிப்பிட்ட நாளில் இருந்து ஆக.12-ம் தேதி வரையில் 18 ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கிராமங்களில் தீவிரமாக ஆய்வு செய்ததில் எவ்வித அனுமதியின்றியும் வீடுகளில் தயாரித்த 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும், இதற்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து, அதில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், விருதுநகர் பகுதியில் உள்ள வி.முத்துலிங்காபுரம், மத்திசேணை, முண்டலாபுரம், காரிசேரி, சோரம்பட்டி, தியாகராஜபுரம், வெம்பக்கோட்டை, வெறறியிலையூரனி, விஜயகரிசல்குளம், வச்சக்காரப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, ஜமீன்சல்வார்பட்டி, ஓண்டிப்புலிநாயக்கனூர், சங்கரலிங்காபுரம், வெள்ளூர் ஆகிய கிராமங்களில் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் வீடுகளிலும், தோட்டப்பகுதிகளிலும் பட்டாசுகள் தயார் செய்கிறார்களா என்பது குறித்து உயர்நிலைக் குழுவினர் தீவிர ஆய்வு செய்யப்பட இருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.