அதன் பின் மழை போன்ற இயற்கை தடையின் காரணமாக நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, மீதி நாள்களில் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வை 28.1.2013 முதல் 31.1.2013 வரையில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வில், தமிழகம் முழுவதும் மொத்தம் 7200 பேர்கள் வரையில் கலந்து கொண்டனர்.இது குறித்து சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த பட்டதாரி காளீஸ்வரி என்பவர் கூறியதாவது: இப்பணிக்கான நேர்முகத் தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆன நிலையில் இறுதிப் பட்டியலை இதுவரையில் வெளியிடப்படாமலே இருக்கிறது. இதனால் இத்தேர்வில் கலந்து கொண்டவர்கள் வேலைவாய்ப்பில்லாமலும், எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைமை உள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு இறுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். தற்போது, மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் மனு நேரில் அளித்தோம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக காளீஸ்வரி தெரிவித்தார்.