விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12-வது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பி.முனியசாமி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் லெட்சுமி நாராயணன் வரவேற்றார். மாநில செயலாளர் வைத்தியநாதன் மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வேலை குறித்த அறிக்கையை மாவட்ட செயலாளர் எம்.தியாகராஜன் வாசித்தார். மாவட்ட பொருளாளர் பி.சுப்புக்காளை நிதி நிலை அறிக்கையை வழங்கினார்.மேலும், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கண்ணன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கதிரேசன், ஆதிதிராவிடர் நலத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.சுந்தராஜன், வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எ.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.