/

திருப்பூர் ஆலுக்காஸ் கடையில் நகை கொள்ளை

திருப்பூர், பிப்.21: திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் கடையின் சுவரைத் துளைத்து நேற்றிரவு புகுந்த கொள்ளையர்கள் லட்சக்கணக்கில் மதிப்புடைய நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இ

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:17 pm

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், பிப்.21: திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் கடையின் சுவரைத் துளைத்து நேற்றிரவு புகுந்த கொள்ளையர்கள் லட்சக்கணக்கில் மதிப்புடைய நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை கடையைத் திறந்து பார்த்தபோது, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.  திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீஸார் கடையில் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 45 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வைரம் ஆகியவை திருடு போயிருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.