தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

முப்படை தலைமைத் தளபதியானார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி!

News image

ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி - @SpokespersonMoD

Updated On :31 மே 2026, 3:34 pm IST

புது தில்லி : இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

முப்படை தலைமைத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் அனில் சௌஹான் சனிக்கிழமையுடன் (மே 30) ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இன்று முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி செய்தியாளர்களுடன் பேசியபோது, “நமது பாதுகாப்புப் படைகள் நமது தேச நலன்களைப் பாதுகாப்பதில் செயலாற்றுத் திறனுடன் திகழ்வதாகவும் நமது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், அவர், “பாதுகாப்பு படைகள் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் மாண்புடனும் நாட்டுக்கு சேவையாற்றும் என்று இந்தியக் குடிமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

கடந்தாண்டில் ஜூலையுடன் ராணுவ துணை தலைமைத் தளபதியாக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பல உயர் பொறுப்புகளை வகித்து வந்ததுடன், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கியப் படைப்பிரிவுகளை வழிநடத்தி நீண்ட ராணுவ அனுபவம் கொண்டவர் என்பதும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (என்.எஸ்.சி.எஸ்.) ராணுவ ஆலோசகராக இருந்த நிலையில், இந்தியாவின் 3-ஆவது முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Summary

Gen Subramani takes charge as India's new Chief of Defence Staff

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.