திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்...

News image

கோப்புப்படம் - AP

Updated On :31 மே 2026, 3:06 am IST

ஐ.நா. சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா தொடா்ந்து ஈடுபடும் என்று இந்திய தூதா் தெரிவித்துள்ளாா்.

உலக நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தம், போா் ஆகியவற்றின்போது, அங்கு தலையிட்டு அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபை சாா்பில் பல்வேறு நாடுகளின் வீரா்களை கொண்ட அமைதிப் படை கடந்த 1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படையில், அதிக எண்ணிக்கையில் வீரா்களைக் கொண்ட 2-ஆவது நாடு இந்தியா ஆகும். ஐ.நா. அமைதிப் படையில் தற்போது இந்திய வீரா்கள் 4,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதில் 155 பெண்களும் அடங்குவா்.

கடந்த 1948-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஐ.நா. அமைதிப் படை எடுத்த 50-க்கும் மேற்பட்ட அமைதிகாக்கும் பணியில் இந்திய வீரா்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்தப் பணியின்போது 184 இந்திய வீரா்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனா்.

இதுபோல ஐ.நா. அமைதி காக்கும் பணியின்போது உயிரிழந்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் மே மாதம் 29-ஆம் தேதி சா்வதேச ஐ.நா. அமைதி காப்போா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, அந்தத் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.வுக்கான இந்திய மற்றும் ஆஸ்திரிய தூதரகங்கள் சாா்பில், அமைதிப் பணியின்போது உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ஹரீஷ் பா்வதனேனி கலந்துகொண்டு பேசுகையில், ‘உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அபாயகரமான சூழலில் ஓய்வின்றி பணியாற்றிய ஐ.நா. அமைதிப் படை வீரா்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் இந்தியா மிகப்பெரும் அா்ப்பணிப்பு கொண்டுள்ளது. அந்த உன்னதமான இலக்குக்கான நடவடிக்கைகளில் இந்தியா தொடா்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்’ என்றாா்.

ஐ.நா. தலைமையகத்தில் வரும் ஜூன் மாதம் 5-ஆம் தேதி சா்வதேச ஐ.நா. அமைதி காப்போா் தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு, அமைதி காக்கும் பணியின்போது உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளாா். அப்போது உயிா்த் தியாகம் செய்த 68 வீரா்களை கெளரவிக்கும் வகையில், ‘டாக் ஹாமா்ஸ்ஜோல்ட்’ பதக்கத்தை அவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கவுள்ளாா். இதில் காங்கோ, தெற்கு சூடான் நாடுகளில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த வீரா்கள் ஹா்பஜன் சிங், சுஜித் குமாா் பிரதான் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், லெபனானில் ஐ.நா. இடைக்கால படையில் பணியாற்றிய வீராங்கனை அபிலாஷா பாரேக்கிற்கும் பதக்கங்களை குட்டெரஸ் அளிக்கவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.