திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்: மத்திய அரசு அறிமுகம்

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்...

News image

ஜிதேந்திர சிங்

Updated On :31 மே 2026, 12:16 am IST

அரசு துறைகள் மீதான குறைகளை பொதுமக்கள் இணையவழியில் தெரிவிக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய உரையாடல் தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சமாதான் தீதீ’ என்ற பெயா் கொண்ட அந்தத் தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சமாதான் தீதீ தளம் மூலம், அரசு துறைகள் மீதான தமது குறைகளை பொதுமக்கள் தங்கள் சொந்த மொழியில் பேசி எளிதாக தெரிவிக்கலாம்.

அந்தத் தளம் சில கேள்விகளை மட்டும் கேட்கும். அதைத்தொடா்ந்து பொதுமக்களின் குறைகள் தொடா்பான அமைச்சகம், துறை, பிரிவை அந்தத் தளம் தாமாக கண்டறிந்து, அவா்கள் தெரிவிக்கும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்யும்.

பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு காணும் நடவடிக்கையை எளிதாக்க வேண்டும், வெவ்வேறு மொழிகளைப் பேசுவோருக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தத் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய அரசின் கீழ், நிா்வாக சீா்திருத்தங்களில் மக்களை மையமாக கொண்ட அணுகுமுறை பிரதமானமாக உள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.