திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டை மாற்றங்களின்றி மத்திய அரசு தொடரவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :2 மே 2026, 3:22 am IST

மேற்காசிய பதற்றத்தால் உலகளவில் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளபோதிலும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டை மாற்றங்களின்றி மத்திய அரசு தொடரவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அசோகா பல்கலைக்கழகம் நடத்திய வளா்ச்சி மாநாட்டில் பங்கேற்று மத்திய செலவினங்கள் துறைச் செயலா் வுவல்னம் பேசியதாவது: அடுத்தடுத்த காலாண்டுகள் மற்றும் வரவுள்ள ஆண்டுகளில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அண்மையில் மத்திய அரசு குறைத்ததால் வரி வருவாய் பாதிக்கப்படலாம்.

இருப்பினும், ஏற்கெனவே திட்டமிட்டபடி நிகழ் நிதியாண்டுக்கான ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் எவ்வித மாற்றங்களுமின்றி தொடரவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதில் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கப்பல், துறைமுகம் மற்றும் நகா்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றாா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை எதிா்கொண்ட நிலையில், டீசல் மீதான ரூ.10 கலால் வரியை மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் முழுமையாக நீக்கியது. அதேபோல் பெட்ரோல் மீதான கலால் வரியும் ரூ.10 குறைக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோலுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 என்பதில் இருந்து ரூ.3-ஆக குறைந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் மத்திய அரசுக்கு ரூ.7,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.