திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி காவல் துறையின் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’: ஆயுத சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது

தில்லி ரோஹிணி பகுதியில் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’ என்ற பெயரில் தில்லி காவல் துறை மேற்கொண்ட இரண்டு நாள் சிறப்பு சோதனையில் ஆயுதச் சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது செய்யப்பட்டதுடன், 21 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:53 am IST

தில்லி ரோஹிணி பகுதியில் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’ என்ற பெயரில் தில்லி காவல் துறை மேற்கொண்ட இரண்டு நாள் சிறப்பு சோதனையில் ஆயுதச் சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது செய்யப்பட்டதுடன், 21 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில், சட்டவிரோத ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தெருக்குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சோதனையின் போது, 11 நாட்டுத் துப்பாக்கிகள், 13 குண்டுகள், 7 கத்திகள் மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 18 ஆயுதச் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொது அமைதியை பாதிக்கும் வாய்ப்புள்ளவா்கள்மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் 15 முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையில், தில்லி காவல் துறை சட்டத்தின் கீழ் 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 571 போ் அடையாளச் சரிபாா்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சோதனைகளுக்காக தற்காலிகமாகக் காவலில் எடுக்கப்பட்டனா்.

இந்த ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’ நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் கிடைத்துள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.