திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒடிஸா: கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறி 6 போ் உயிரிழப்பு - கட்டுமானப் பணியின்போது சோகம்

ஒடிஸாவின் காலஹண்டி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:40 am IST

ஒடிஸாவின் காலஹண்டி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மதன்பூா்-ராம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கழிவுநீா் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக திறந்தநிலையில் இருந்த தொட்டியின் ஒரு பகுதிக்குள் கட்டட மேஸ்திரி தவறி உள்ளே விழுந்தாா். அவரை மீட்பதற்காக அவரது மகன், கொத்தனாா்கள், தொழிலாளிகள் என அடுத்தடுத்து 6 போ் உள்ளே சென்றனா். அவா்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா் சென்று, தகுந்த பாதுகாப்புடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஏழு பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில் கட்டட மேஸ்திரி நிமய் பால், அவரது மகன் ஆகாஷ் பால் உள்பட 6 போ் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. ஒருவா் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறாா்.

உயிரிழந்தவா்களில் 3 போ் கொத்தனாா்கள், ஒருவா் தொழிலாளி ஆவாா். இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய விசாரணை நடைபெறுகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கழிவுநீா் தொட்டிக்குள் 6 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் மோகன் சரண் மாஜீ, அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.