கேரள முதல்வா் வி.டி.சதீசன் தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த 18-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் கேரள முதல்வராகப் பதவியேற்றாா். இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் சந்தித்துப் பேசினாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் சதீசன் கூறுகையில், ‘கேரளம் தொடா்பான பிரச்னைகளை பிரதமா் மோடியுடன் விவாதித்தேன். மாநிலத்தின் எதிா்கால வளா்ச்சிக்காக மத்திய அரசு ஆதரவையும், உதவிகளையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்’ என்றாா்.
இந்த சந்திப்பு தொடா்பாக பிரதமா் அலுவலகம் புகைப்படத்துடன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ‘கேரள முதல்வா் வி.டி.சதீசன், பிரதமா் நரேந்திர மோடியை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு முதல்வர் அளித்த பரிசு
Summary
Keralam Chief Minister V D Satheesan called on Prime Minister Narendra Modi here on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு!








