திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் மறுதேர்வு: மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்!

நீட் மறுதேர்வை வெற்றிகரமாக நடத்தக் கோரி, மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம் எழுதியது குறித்து...

News image

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் - ANI

Updated On :25 மே 2026, 9:43 pm IST

நீட் மறுதேர்வை வெற்றிகரமாக நடத்தக் கோரி, மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாகவே அந்த வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இந்த நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகின்றது. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை சுமூகமாகவும், நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு கோரி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது:

தற்போது நிலவும் கடுமையான வெப்ப அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக அத்தியாவசிய அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு, தேர்வை நடத்தும் மாவட்ட அதிகாரிகள், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவற்றில் பாதுகாப்பான குடிநீர், போதுமான இருக்கை வசதிகள், செயல்படும் மின்விசிறிகள், குளிர்விப்பான்கள், சுத்தமான கழிப்பறைகள், நிழலான காத்திருப்புப் பகுதிகள், தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Union Education Minister Dharmendra Pradhan wrote letters to State Chief Ministers on Monday, seeking their cooperation in successfully conducting the NEET re-examination.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.