தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

கர்நாடகத்தில் கடல் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

News image

சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 10:42 pm IST

கர்நாடகத்தில் கடல் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

கர்நாடகத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அல்வெகோடி முகத்துவாரப் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்க பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஒன்றாகச் சென்றனர்.

அங்கு திடீரென கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதில், பலியான 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல் தேடப்பட்டு வருகின்றது. மூன்று பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சரதஹோலே ஹரிஹிட்லு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

வானிலை மாற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருந்ததாக அங்குள்ளோர் தெரிவித்தனர். மேலும், இந்த வாரத் தொடக்கத்தில் மீனவர்களையும் பொதுமக்களையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

தீயணைப்புத் துறையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, இந்தச் சம்பவம் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Summary

Eight of family drown in Alvekodi estuary while collecting bivalves in Karnataka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.