தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டது பற்றி..

News image

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி - x

Updated On :23 மே 2026, 12:45 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தன்னுடைய இன்ஸ்டா மற்றும் கட்சியின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த நையாண்டி கட்சியின் பிரசாரம் நேற்று வைரலாகி லட்சக்கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இணையதளமே ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய அளவில் இந்த ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய பல்வேறு சமூக வலைத்தளங்களும் இதன் மூலம் முடக்கப்பட்டிருப்பதாகவும் தீப்கே குற்றம்சாட்டியிருக்கிறார்.

தீப்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்கம் முடக்கப்பட்டது, இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டர் கணக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் இருந்த மற்றொரு கணக்கும் முடக்கிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எந்த சமூக வலைத்தளப் பக்கங்களையும் எங்களால் இயக்க முடியவில்லை. எனவே, அதில் ஏதேனும் பதிவுகள் வந்தால், அது அதிகாரப்பூர்வ தகவலாக இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியவரும், போஸ்டர் பல்கலை முன்னாள் மாணவருமான தீப்கே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என்ற நையாண்டி கட்சியைத் தொடங்கினார். அதில் பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகினர். அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.

இது நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் 2 நாள்களுக்கு முன்பு அதன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.

Summary

Cockroach Peoples Party website, Instagram pages hacked

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.