கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தன்னுடைய இன்ஸ்டா மற்றும் கட்சியின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்த நையாண்டி கட்சியின் பிரசாரம் நேற்று வைரலாகி லட்சக்கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இணையதளமே ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய அளவில் இந்த ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய பல்வேறு சமூக வலைத்தளங்களும் இதன் மூலம் முடக்கப்பட்டிருப்பதாகவும் தீப்கே குற்றம்சாட்டியிருக்கிறார்.
தீப்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்கம் முடக்கப்பட்டது, இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டர் கணக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் இருந்த மற்றொரு கணக்கும் முடக்கிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எந்த சமூக வலைத்தளப் பக்கங்களையும் எங்களால் இயக்க முடியவில்லை. எனவே, அதில் ஏதேனும் பதிவுகள் வந்தால், அது அதிகாரப்பூர்வ தகவலாக இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியவரும், போஸ்டர் பல்கலை முன்னாள் மாணவருமான தீப்கே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என்ற நையாண்டி கட்சியைத் தொடங்கினார். அதில் பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகினர். அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.
இது நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் 2 நாள்களுக்கு முன்பு அதன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.
Summary
Cockroach Peoples Party website, Instagram pages hacked
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்? - தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஜேஇஇ தரவுகள் கசிவு! கல்வி அமைச்சர் திறமையற்றவர்! கரப்பான்பூச்சி கட்சி

சமூக ஊடகங்களில் வைரலான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்







