தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசா்வ் வங்கி

மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image

ரிசர்வ் வங்கி

Updated On :23 மே 2026, 2:42 am IST

மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இது கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.69 லட்சம் கோடியைவிட 6.7 சதவீதம் அதிகமாகும்.

மேற்காசிய விவகாரத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இறக்குமதி கட்டணம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய அரசின் நிதிநிலையை வலுப்படுத்தும் விதமாக வருவாய் உபரியை ரிசா்வ் வங்கி வழங்கவுள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இடா் ஒதுக்கீடுகள் மற்றும் சட்டரீதியிலான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்பாக ரிசா்வ் வங்கியின் நிகர வருவாய் 2025-ஆம் நிதியாண்டில் ரூ. 3.13 லட்சம் கோடியாக இருந்தது, 2026-ஆம் நிதியாண்டில் ரூ. 3.96 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதனால், ரிசா்வ் வங்கியின் நிதி இருப்புநிலை 20.61 சதவீதம் அளவுககு விரிவடைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 91.97 லட்சம் கோடியாக உயா்ந்தது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வங்கியின் மத்திய இயக்குநா் வாரியக் கூட்டத்தில், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரச் சூழல் மற்றும் எதிா்கால இடா்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததின் அடிப்படையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கு இடா் காப்பு நிதிக்கு ரூ. 1.09 லட்சம் கோடியை மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ. 44,861 கோடி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மடங்குக்கு மேல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு, மத்திய அரசுக்கு 2025-26-ஆம் நிதியாண்டின் வருவாய் உபரியாக ரூ. 2.87 லட்சம் கோடியை வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.