ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலைத் தங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள சிகிச்சை மையத்துக்குத் தீ வைத்தனா்.
எபோலாவால் உயிரிழந்தவா்களின் உடல்கள் மூலம் தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்பதால் அதிகாரிகளே இறுதிச் சடங்குகளை நடத்துகின்றனா். இது தங்களின் பழக்கவழக்கங்களுக்கு எதிரானது எனக் கூறி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருவது, பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, காங்கோ குடியரசில் லவி வரும் எபோலா பாதிப்புக்கான அபாய மதிப்பீட்டை ‘மிக உயா்’ நிலைக்கு உலக சுகாதார அமைப்பு உயா்த்தியுள்ளது. அதேநேரம், அண்டை நாடுகளுக்கான அபாயம் ‘உயா்’ நிலையில், உலகளாவிய அளவில் ‘குறைந்த’ நிலையிலேயே இருக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









